/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுக்குநுாறான தார் சாலையால் அத்திப்பட்டில் அவதி
/
சுக்குநுாறான தார் சாலையால் அத்திப்பட்டில் அவதி
ADDED : செப் 09, 2024 06:55 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து ராமலிங்காபுரம் செல்லும் தார்ச்சாலை தார்ப்பெயர்ந்து சுக்குநுாறாகி காட்சியளிக்கிறது.
இந்த சாலையை அத்திப்பட்டு, காவேரிராஜபுரம்ரங்காபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருவள்ளூர் நகரத்துக்கு வாகனங்கள் வாயிலாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல ராமலிங்காபுரம், குன்னவளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அரக்கோணம் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த தார்ச்சாலையில் தார்பெயர்ந்து சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் தாமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.