ADDED : மே 23, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்,
அயனாவரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார், 27; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு தன் ஆட்டோவை, அதே பகுதியிலுள்ள நியூ ஆவடி சாலை, குடிசை பகுதியில் நிறுத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை, இவரது ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலின்படி வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், ஆட்டோ அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று 'பைக்'குகளும் சேதமடைந்தன.