/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை கோலாகலம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை கோலாகலம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை கோலாகலம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை கோலாகலம்
ADDED : ஆக 26, 2024 11:12 PM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் மாதந்தோறும் வரும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
கடந்த மாதம், 29ம் தேதி நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.
ஆடிக்கிருத்திகை அடுத்து வரும் ஆவணி மாத கிருத்திகை என்பதால், நேற்று காலை, 6:00 மணி முதல், இரவு, 9:30 மணி வரை பக்தர்கள் பொதுவழியில், நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கிருத்திகை அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையின் தென்மேற்கில் உள்ளது நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில்.
இந்த கோவிலில் நேற்று ஆவணி கிருத்திகையை ஒட்டி, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மகா தீபாராதனையை தொடர்ந்து சுவாமி தரிசனம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்புறப்பாடு எழுந்தருளினார்.
இதே போல், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில், கரிக்கல் குமரேசகிரி மலைக்கோவில்களிலும் நேற்று கிருத்திகை சிறப்பு உற்சவம் நடைபெற்றது.