ADDED : மார் 13, 2025 02:44 AM

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில் அமைந்துள்ள சரணலாய பகுதிக்கு பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் என வகையான பறவை இனங்கள் வலசை வந்து செல்கின்றன
நவம்பர் - மார்ச் மாதம் வரை, பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இனப் பெருக்கத்திற்காக இங்கு வந்து குவிகின்றன.
இந்த ஆண்டும் ஏராளமான பறவைகள் பழவேற்காடு ஏரியில் குவிந்து இருக்கின்றன.
இவை குறித்து வனத்துறை மற்றும் பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த சில தினங்களாக பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில் கடல்பொந்தா, வெள்ளைநாரை, சாம்பல்நாரை, வர்ணநாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து ஜாலியாக விளையாடி வருகின்றன.
ஏரியில் மீன்களை லாவகமாக பிடித்து உண்பதும், தண்ணீரில் நீந்தியபடி சுற்றுவதும் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்து வருகின்றன.
வழக்கமாக ஏரியின் தீவுப்பகுதிகளில் இருக்கும் இவை அவ்வப்போது மீன் இறங்குதளம், கழிமுகப்பகுதிகளுக்கு வந்து செல்லும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
****