sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு

/

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு


ADDED : ஜூன் 18, 2024 10:17 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் பா.ஜ., ஒன்றிய கவுசல்யா சரவணன் நேற்று வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் கசிவுநீர் வரத்து கால்வாயை தனிநபர் ஒருவர் புதைத்து மண்சாலையாக மாற்றியுள்ளார். அதே போல் லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், 300 அடி அகலம், ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளால் தற்போது, 15 அடி அகலமாக சுருங்கியுள்ளன.

இதனால் ஏரிக்கு நீர்வரத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஏரி தண்ணீர் நிரம்புவதில்லை.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் தீபா, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us