sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்

/

ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்

ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்

ஒய்.எம்.சி.ஏ.,வில் நாளை 'பக்' கோப்பை போட்டிகள்


ADDED : ஜூலை 21, 2024 06:52 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு திருவிழா நடைபெறும்.

அந்த வகையில் 67வது ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நாளை துவங்குகின்றன.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.

தடகளம், வில்வித்தை, பூப்பந்து, இறகுபந்து, கூடைபந்து, வாலிபால், குத்துசண்டை, கிரிக்கெட், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, கோ - கோ, டென்னிஸ், எறிபந்து உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் இருபாலருக்கும் நடக்கவுள்ளன.

நாளை காலை 9:00 மணிக்கு துவங்கும் போட்டிகளை, சென்னை மண்டல கல்லுாரியின் கல்வி இணை இயக்குனர் சுடர்கொடி துவக்கி வைக்கிறார். போட்டிகள் தொடர்ந்து, 26ம் தேதி வரை நடக்கின்றன.






      Dinamalar
      Follow us