/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
ADDED : ஆக 29, 2024 11:28 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியப் பகுதியில் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் ஆகிய நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்கள் பிடித்து அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவித்திருந்தது.
ஆனால் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகள் குறித்து ஒன்றிய அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.