/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகள் சாலையில் உலா; நெரிசலில் தவிக்கும் வாகனங்கள்
/
கால்நடைகள் சாலையில் உலா; நெரிசலில் தவிக்கும் வாகனங்கள்
கால்நடைகள் சாலையில் உலா; நெரிசலில் தவிக்கும் வாகனங்கள்
கால்நடைகள் சாலையில் உலா; நெரிசலில் தவிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 07, 2024 07:40 AM

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கிருந்து மண்ணுார் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை வழியே தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் மண்ணுார் பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.