/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கரில் தேர் புனரமைப்பு பணி தீவிரம்
/
சோளிங்கரில் தேர் புனரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 05, 2024 12:25 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில்.
கோவிலின் உற்சவரான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரின் நடுவே அமைந்துள்ள கோவிலில் அருள்பாலித்து வருகிறார். பக்தோசித பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சித்திரை முதல் நாளான ஏப்., 14ம் தேதி, உற்சவர் பக்தோசித பெருமாள் பெரிய மலை யோக நரசிம்மர் சுவாமி கோவிலுக்கு எழுந்தருள்கிறார்.
ஊர் கோவிலில் அம்ச வாகனம், சிம்ம வாகனம், கஜ வாகனம் என தினசரி பல்வேறு வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருள்கிறார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக தேர் செப்பனிடும் பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. தேர் பராமரிப்பு பணிகளுடன், கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.

