நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை போலீசார் நேற்று காலை பாண்டரவேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஈகோ வேன், போலீசாரை கண்டதும் வேகமாக சென்றது.
போலீசார், அந்த வாகனத்தை நிறுத்தினர். சோதனையில், அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 20 ஆயிரம் பொட்டலங்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட அரக்கோணம் அடுத்த கீழ்வானம் கிராமத்தை சேர்ந்த கவுதம், 28, என்பரிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

