/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : மார் 02, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் அம்சா நகரைச் சேர்ந்தவர் வேலு, 42; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் திருப்பாச்சூர் பெரிய காலனி தெருவில் உள்ள வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வேலு பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது உறவினர் கார்த்திக் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.