sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்

/

மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்

மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்

மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்


ADDED : ஜூலை 22, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் மேல்நல்லாத்துார் ஏரி உள்ளது. இந்த ஏரியை இப்பகுதிவாசிகள் 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஏரியில் தற்போது பெய்து வரும் மழையில் நீர் சேகரமாகி உள்ளது.

ஏரியின் மதகு சேதத்தால் வெளியேறும் மழைநீர் அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பகுதி வழியே வெளியேறி வீணாகி வருகிறது.

நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில தினங்களாக ஏரியின் கரைகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் சேதமடைந்த மதகு பகுதியையும் சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதகை சீரமைத்து மழைநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us