/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகம்மாசத்திரத்தில் சேதமான கழிவுநீர் கால்வாய்
/
கனகம்மாசத்திரத்தில் சேதமான கழிவுநீர் கால்வாய்
ADDED : ஆக 29, 2024 11:27 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பிராமணர் தெரு. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் பஜார் வீதியில் கழிவுநீர் கால்வாயில் கலக்கும் படி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. திறந்த நிலையில் ஓடும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் அப்பகுதிவாசிகள் காய்ச்சல், நோய்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.