sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை

/

வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை

வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை

வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க கோரிக்கை


ADDED : ஆக 08, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:வடமதுரை ஊராட்சியில் வடமதுரை, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம் உள்ளிட்ட, 13 கிராமங்கள் உள்ளன. இதில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம், கால்நடை வளர்த்தல் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உள்ளன.

ஊராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், மற்ற ஊராட்சியை ஒப்பிடும் போது, நலத்திட்ட உதவிகள் பெற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே, இந்த கிராம மக்களின் நலன் கருதி, வடமதுரை ஊராட்சியை மூன்றாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us