sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

/

மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 06, 2024 10:10 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையடிவாரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ள தேவையான உபகரணங்களை நிறுவ வேண்டும்.

24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என பகுதிவாசிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அவசர காலங்களில், திருத்தணி அல்லது சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

30 ஆயிரம் பேர் வசிக்கும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் அரசு மருத்துவமனை இருந்தும், 30 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி, மருத்துவமனை வளாகத்தில் நேற்று பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தினர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us