sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பனை மரங்கள் வெட்டிய விவகாரம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

/

பனை மரங்கள் வெட்டிய விவகாரம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

பனை மரங்கள் வெட்டிய விவகாரம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

பனை மரங்கள் வெட்டிய விவகாரம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி


ADDED : ஜூலை 18, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், கரை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள அரசு நிலத்தில் இருந்த, 50க்கும்அதிகமான பனை மரங்கள் இருந்தன.

கடந்த 6ம் தேதி தனி நபர் வசதிக்காக, இங்குள்ளபனை மரங்கள் ஜே.சி.பி.,இயந்திரம் வாயிலாக வெட்டப்பட்டன. இந்த சம்பவம் கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல்ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்துவருவாய்த் துறையினர், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டது.

அதன்பின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததால், கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்கூறியதாவது:

வீட்டுமனை அமைப்பதற்காக கரை புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளனர். அங்கிருந்த பழமையான பனைமரங்கள் வெட்டப்பட்டுஉள்ளன.

பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனவும், அனுமதியின்றி மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது குற்றம் எனவும் அரசு தெரிவிக்கிறது.

ஆனால், மரம் வெட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. வருவாய்த் துறை சார்பில் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையும் கிழிக்கப்பட்டு உள்ளது.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுவருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us