/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுச்சாவடிக்குள் தி.மு.க.,வினர் அத்துமீறல்
/
ஓட்டுச்சாவடிக்குள் தி.மு.க.,வினர் அத்துமீறல்
ADDED : ஏப் 19, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தென்சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 177வது சி.எஸ்.ஐ பள்ளியின் ஓட்டுச்சாவடிக்குள், நேற்று காலை தி.மு.க.,வைச் சேர்ந்த துரை மற்றும் கவுன்சிலர் கமலா செழியன் ஆகியோர், அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, ஓட்டுச்சாவடிக்குள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பூத் முகவர்கள் மட்டுமே வர முடியும் என கறாராக கூறி, அவர்களை வெளியே அனுப்பினர்.

