/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம்
ADDED : ஆக 18, 2024 01:37 AM

திருவள்ளூர்:மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா ஆர்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லுாரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் மருத்துவர்கள் ஜெகதீசன், விஜயராஜ், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ கல்லுாரி மாணவ - மாணவியர், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாவலர்கள் இல்லாததால், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் அரசு உடனடியாக போதிய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.