sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒரே ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கி கையாடல்

/

ஒரே ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கி கையாடல்

ஒரே ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கி கையாடல்

ஒரே ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கி கையாடல்


ADDED : மே 01, 2024 10:15 PM

Google News

ADDED : மே 01, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகிய பலவித வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு வளர்ச்சிப் பணிகளுக்கும், ஆளும் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலர்களே, 15 சதவீத 'கமிஷன்' வாங்கிக் கொண்டு, பணிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

ஒரே பணிக்கு, இரு விதமான திட்ட நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல லகரங்களை வாரி சுருட்டி உள்ளனர்.

குறிப்பாக, வில்லிவலம் ஊராட்சி குடிநீர் திட்டத்திற்கு, 3 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளனர்.

அதே ஆழ்துளை கிணற்றின் மற்றொரு பகுதியில், நாயக்கன்பேட்டை ஊராட்சி குடிநீர் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, 5.80 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக, திட்ட பலகை எழுதி உள்ளனர்.

ஒரே ஆழ்துளைக் கிணற்றில், ஒருபுறம் நாயக்கன்பேட்டை ஊராட்சிக்கும், மற்றொருபுறம் வில்லிவலம் ஊராட்சிக்கும், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளதாக திட்ட பலகை வைத்து, ஒரே திட்டத்திற்கு இருவிதமான நிதியை ஒதுக்கீடு செய்து, பணத்தை கையாடல் செய்து உள்ளனர்.

இதைக் கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 'கையூட்டு' வாங்கிக் கொண்டு, பணிகளை கண்காணிக்காமல் கையெழுத்திட்டு பணத்தை விடுவித்து இருப்பது, வேதனையாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us