sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

/

போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்


ADDED : ஆக 02, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் சுரேஷ் வரவேற்க, ஒன்றிய ஆணையர்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமலை --காங்., ஒன்றிய கவுன்சிலர் கூட்டங்களில் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், நாங்கள் கேட்கும் தகவல்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ராமகிருஷ்ணன் ஆணையர்:

அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

திருமலை - காங்.,: வெங்கலில் இருந்து ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை வழியே அரசு பேருந்து இயக்கவேண்டும்.

ராமகிருஷ்ணன் ஆணையர்:

சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

சரவணன் -அ.தி.மு.க.,: ஒன்றியத்தில் உள்ள, 53 ஊராட்சிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கின்றனர்.

ரமேஷ் -தலைவர் : இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுத்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவி - கம்யூ.,:

மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராமகிருஷ்ணன் ஆணையர்:

இதுகுறித்து தகவல் வழங்கப்படும்.

ரவி கம்யூ.,: தானாகுளம் -அன்னதானகாக்கவாக்கம் இடையே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ரமேஷ் தலைவர் : இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us