/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ADDED : செப் 01, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வெலமண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவய்யா, 57. நேற்று முன்தினம் காலை வயலுக்கு சென்றார். அப்போது டிரான்ஸ்பார்மரில் தொங்கிக் கொண்டிருந்த ஒயர், இவர் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.