ADDED : செப் 09, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூர், குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 57; மீனவர். நேற்று முன்தினம் இரவு, குப்பம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருவொற்றியூர் குப்பம் அருகே, எண்ணுார் விரைவு சாலையை கடந்தபோது, எண்ணுாரில் இருந்து ராயபுரம் நோக்கி, அதிவேகமாக சென்ற கார், கன்னியப்பன் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார்.