sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆடுகளை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு

/

ஆடுகளை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு

ஆடுகளை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு

ஆடுகளை காணவில்லை போஸ்டரால் பரபரப்பு


ADDED : ஜூலை 04, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துாரைச் சேர்ந்தவர் கார்த்தி, 38. விடையூர் செல்லும் சாலையில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் வளர்க்கும் இரு ஆடுகள், சில நாட்களுக்கு முன் 3, 2 என, ஐந்து குட்டிகளை ஈன்றன.

கடந்த 26ம் தேதி இரவு இவரது வீட்டிலிருந்த இரண்டு தாய் ஆடுகள் திருடப்பட்டன. கடம்பத்துார் காவல் நிலையத்தில், கார்த்தி புகார் அளித்தார்.

அன்று இரவே, திருடிய ஆடுகளுடன் 'ஸ்பிளண்டர்' பைக்கில் கசவநல்லாத்துாரில் சென்ற மர்ம நபர்களை, போலீசார் மடக்கினர். மர்ம நபர்கள், ஆடுகளையும், பைக்கையும் விட்டு தப்பி ஓடிவிட்டனர். பீதியில் இருந்த ஆடுகள், இருட்டில் காணாமல் போயின. போலீசார், பைக்கை மட்டும் மீட்டனர்.

இந்நிலையில், 'ஐந்து குட்டிகளை ஈன்ற இரு ஆடுகளை காணவில்லை' என, அதன் உரிமையாளர் கார்த்தி, ஆடுகளின் புகைப்படங்களுடன் கடம்பத்துார் முழுதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதில், ஆடுகளை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் தரப்படும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us