/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகி வரும் அரசு வாகனங்கள்
/
கலெக்டர் அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகி வரும் அரசு வாகனங்கள்
கலெக்டர் அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகி வரும் அரசு வாகனங்கள்
கலெக்டர் அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகி வரும் அரசு வாகனங்கள்
ADDED : செப் 06, 2024 12:15 AM

திருவள்ளூர்:கலெக்டர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள், பழுதாகி, ஆண்டு கணக்கில் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளிட்ட அனைத்து மாவட்ட அளவிலான அரசு தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு, அரசு வாகனம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் வாகனம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பதிவு செய்த நாளில் இருந்து 10 ஆண்டுகள் வரை இயக்கப்பட வேண்டும். அதற்கு மேல் சென்றால், அந்த வாகனங்களை, அந்தந்த துறை நிர்வாகம் வாயிலாக, அரசு வாகன பரிசோதனை மையம் வாயிலாக, ஏலம் விடப்பட வேண்டும்.
இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பயன்படுத்தி வந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள், பழுதாகி, பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வாகனங்கள் அனைத்தும் துருப்பிடித்து, வீணாகி வருகிறது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் இட நெரிசல் ஏற்பட்டு, பிற வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் உள்ளது. மேலும், பழுதடைந்த வாகனங்களை நல்ல முறையில் ஏலம் விட்டால், அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல், அலட்சியமாக இருப்பதால், துருப்பிடித்த வாகனங்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, வளாகத்தில் வீணாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விட்டு, அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.