/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் அம்மன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி
/
புட்லுார் அம்மன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி
புட்லுார் அம்மன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி
புட்லுார் அம்மன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி
ADDED : மார் 05, 2025 02:02 AM

புட்லுார்:புட்லுார் அம்மன் கோவில் சாலையில், ஆக்கிரமிப்பு கடைகளால் நேற்று நிலவிய போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுார்- ராமாபுரம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தினமும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர், ரயில் மார்க்கமாக புட்லுார் வருகின்றனர். அங்கிருந்து, ராமாபுரம் சாலை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், இச்சாலையின் இருபுறமும், உள்ளூர் வாசிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி மற்றும் அமாவாசை உற்சவத்தை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று புட்லுார் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், இருசக்கரம், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்றதால், பக்தர்கள் கடும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
எனவே, சாலையோர ஆக்கிரமிப்பை கோவில் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் போலீசார் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.