sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒரு தடத்தில் மட்டும் கனரக வாகனங்கள் அனுமதி இரவு நேரத்தில் ஸ்தம்பிக்கும் சோதனைச்சாவடி

/

ஒரு தடத்தில் மட்டும் கனரக வாகனங்கள் அனுமதி இரவு நேரத்தில் ஸ்தம்பிக்கும் சோதனைச்சாவடி

ஒரு தடத்தில் மட்டும் கனரக வாகனங்கள் அனுமதி இரவு நேரத்தில் ஸ்தம்பிக்கும் சோதனைச்சாவடி

ஒரு தடத்தில் மட்டும் கனரக வாகனங்கள் அனுமதி இரவு நேரத்தில் ஸ்தம்பிக்கும் சோதனைச்சாவடி


ADDED : ஏப் 29, 2024 11:22 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, : சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.

இந்த சோதனைச் சாவடியில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக ஆறு தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 தடங்களும் உள்ளன.

போக்குவரத்து துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து தடங்களும் அடைத்து, ஒரே ஒரு தடம் வழியாக, கனரக வாகனங்களை அனுமதித்து, ஒவ்வொரு வாகனங்களாக, போக்குவரத்து துறையினர் ஆவண தணிக்கை செய்து வருகின்றனர்.

இதனால், சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், குறித்த நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஆட்களை நியமிக்க வேண்டும். குறைந்தது மூன்று தடங்கள் வழியாக கனரக வாகனங்களை அனுமதித்து, ஆவண தணிக்கை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us