/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊர்க்காவல் படையினருக்கு வேலை நாள், சம்பளம் குறைவு வாழ்வாதாரம் பாதிப்பதால் வெளியேறும் அவலம்
/
ஊர்க்காவல் படையினருக்கு வேலை நாள், சம்பளம் குறைவு வாழ்வாதாரம் பாதிப்பதால் வெளியேறும் அவலம்
ஊர்க்காவல் படையினருக்கு வேலை நாள், சம்பளம் குறைவு வாழ்வாதாரம் பாதிப்பதால் வெளியேறும் அவலம்
ஊர்க்காவல் படையினருக்கு வேலை நாள், சம்பளம் குறைவு வாழ்வாதாரம் பாதிப்பதால் வெளியேறும் அவலம்
ADDED : மார் 14, 2025 11:23 PM
திருவாலங்காடு:மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நாள் அதிகம் கிடைக்காமலும், சம்பளம் குறைவாகவே வழங்கப்படுவதாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பணியில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
போலீசாருடன் பல்வேறு பணிகளில் இணைந்து செயல்படும் விதமாக, 1962ல் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு என, தனி சீருடை உள்ளது. போலீஸ் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், அந்த பணி கிடைக்காத சூழலில், ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில், 16,500 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர். போலீசாரை தேர்ந்தெடுக்கும் அனைத்து தகுதிகளும் இவர்களுக்கும் உண்டு. இவர்கள் போலீசாருடன் இணைந்து டிராபிக் பணி செய்வது, கோவில் திருவிழாக்கள், பொது கூட்டங்கள், வி.ஐ.பி., பாதுகாப்புகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என, ஐந்து காவல் கோட்டங்களில், 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு, 350 பேர் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில், பாதி பேர் பெண்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கு, மாதத்தில் ஐந்து முதல் 10 நாட்கள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாதத்தில் சில நாட்கள் மட்டும் பணி உள்ள நிலையில், கிடைக்கும் ஊதியத்தை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும், பலரும் இதுவரை போதிய சம்பளம் மற்றும் வேலை நாட்கள் கிடைக்காமல் வெளியேறுவதாகவும் கூறுகின்றனர்.
சீனியர்கள் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்த ஊர்க்காவல் படையினருக்கு, 20 முதல் 30 நாட்கள் கூட வேலை கிடைக்கிறது.
தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தி, கூடுதல் நாட்கள் வேலை கொடுத்தால், பொருளாதார ரீதியாக சிரமமின்றி வாழ முடியும்.