sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காட்டுப்பன்றி அட்டகாசம் அதிகரிப்பு விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதி

/

காட்டுப்பன்றி அட்டகாசம் அதிகரிப்பு விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதி

காட்டுப்பன்றி அட்டகாசம் அதிகரிப்பு விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதி

காட்டுப்பன்றி அட்டகாசம் அதிகரிப்பு விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 14, 2025 11:00 PM

Google News

ADDED : மார் 14, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி, பாகசாலை பகுதியில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது, கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பேரம்பாக்கம் -- திருவாலங்காடு சாலை, உரியூர் சாலை, செஞ்சி சாலைகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதுடன், சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை காயப்படுத்தி செல்கின்றன. இதனால், இச்சாலையில் இரவு நேரங்களில் பயணிப்போர் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், காட்டுப்பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, காட்டுப்பன்றி தொல்லைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us