/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் தேர்வுக்கு தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்
/
தொழில் தேர்வுக்கு தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 07, 2024 07:35 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக, 2024-25ம் ஆண்டுக்கான, கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் 200 ரூபாய் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதுநிலைத் தேர்வுகள் கருத்தியல் தேர்வு அக்.15, செய்முறை தேர்வு அக்.16ல், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். தனித்தேர்வராக தேர்வு எழுதுவோர், வரும் 18க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.