/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' வளாகமாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
/
'பார்க்கிங்' வளாகமாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
'பார்க்கிங்' வளாகமாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
'பார்க்கிங்' வளாகமாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
ADDED : ஜூன் 27, 2024 01:31 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் பெரும் பகுதியை ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், 'பார்க்கிங்' வளாகம் போன்று பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது.
இதனால், கும்மிடிப்பூண்டி நகருக்குள் வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது.
பேருந்து நிலையத்தை முனையமாக கொண்ட பேருந்துகள் மட்டும் உள்ளே சென்று வருகின்றன. மற்ற பேருந்துகள், ஜி.என்.டி., சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருப்பது பேருந்து நிலையமா அல்லது பார்க்கிங் வளாகமா என பயணியர் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, பயணியர் நலன் கருதி, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள பேருந்து நிலையத்தை மீட்க வேண்டும். பேருந்துகள் அனைத்தும் உள்ளே சென்று வர போலீசார் வழிவகை செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.