நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது.
அதன் அருகே மதுக்கடை இயங்காத நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்த முத்து, 22, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 38 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.