நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரில் சிலர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருத்தணி துணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் திருத்தணி சாய்பாபா நகர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்து, 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மது விற்பனையில் ஈடுபட்டஎஸ்.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் , 28 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.