sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு 3 ஆண்டாக தொடரும் அவலம்

/

ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு 3 ஆண்டாக தொடரும் அவலம்

ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு 3 ஆண்டாக தொடரும் அவலம்

ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு 3 ஆண்டாக தொடரும் அவலம்


ADDED : மார் 09, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கமாக தினமும் 220 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களில் இருந்து, 70,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், பயணியர் பயன்பாட்டிற்காக, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் மூன்றாண்டுக்கு முன் இரு கழிப்பறைகள் கட்டப்பட்டன.

இந்த கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது முதல், தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால், பயன்பாட்டிற்கு வராமலேயே பாழாகும் அவலநிலை உள்ளதாக பயணியர் புலம்புகின்றனர்.

மேலும் பெண் பயணியர் இயற்கை உபாதை கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

ஆண்கள் பலர், ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை உள்ளது.

எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us