நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சின்னம்மாபேட்டையில், ரயில்வே கேட் செல்லும் சாலையில், தமிழ்நாடு கிராம வங்கி உள்ளது. இதன் எதிரே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று அதிகாலை இறந்து கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.