sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது

/

பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது

பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது

பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது


ADDED : மார் 05, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன், 52; கோயம்பேடு சந்தையில் பூண்டு மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார்.

கடையில் விற்பனையான ஆறு லட்சம் ரூபாயை, கடந்த 2ம் தேதி இரவு, கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டி சென்றார். நேற்று முன்தினம் கடையை திறந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.

கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நெற்குன்றத்தில் தங்கி, இவரது கடையில் பணிபுரிந்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பரசன், 43, என்பவர் திடீரென மாயமானது தெரிந்தது.

இந்நிலையில், அன்பரசனை நேற்று, போலீசார் பிடித்தனர். கடன் தொல்லை காரணமாக, கடையில் இருந்த பணத்தை, அன்பரசன் திருடியது தெரியவந்தது.

மேலும், திருட்டு பணத்தில் கடனை அடைத்து, மனைவி, பிள்ளைகளுக்கு புதிய துணிகளை வாங்கியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 4.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us