ADDED : மே 07, 2024 08:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த யு.ஆர்.ஆர்.கண்டிகையை சேர்ந்தவர் பாலாஜி, 40. இவருக்கு சொந்தமான நிலம், கிராமத்திற்கு அருகில் உள்ளது. இவர், கடந்த 5ம் தேதி காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வயல்வெளிக்கு சென்றார்.
மீண்டும் வீடு திரும்பவில்லை. வயல்வெளியில் அவரது இருசக்கர வாகனம் மட்டும் இருந்தது. பாலாஜியை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி குணா, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், பாலாஜியை தேடிவருகின்றனர்.

