/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடையூறு மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
இடையூறு மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 23, 2024 12:22 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் இருந்து சோத்துப்பெரும்பேடு, செக்கஞ்சேரி, புதுகுப்பம் வழியாக சீமாவரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, மீஞ்சூர் - வண்டலுார் சாலையுடன் இணைகிறது.
இந்த சாலையில் உள்ள கண்ணியம்பாளையம் கிராமத்தில், சில மின்கம்பங்கள் சாலையின் மிக அருகில் அமைந்துள்ளன. இதனால், மின்கம்பங்கள் உள்ள பகுதிகளில் சாலை வளைந்து செல்கிறது.
வாகன ஓட்டிகளும், மின்கம்பங்கள் உள்ள பகுதியை கடக்கும்போது, வலது, இடது என மாறி மாறி பயணிக்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன.
இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, சாலையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான இடவசதியும் அப்பகுதியில் உள்ளது.
இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. விபத்து மற்றும் அதனால் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

