/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகைமூட்டமான தேசிய நெடுஞ்சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்
/
புகைமூட்டமான தேசிய நெடுஞ்சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்
புகைமூட்டமான தேசிய நெடுஞ்சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்
புகைமூட்டமான தேசிய நெடுஞ்சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 25, 2024 01:24 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை, சுற்றுலா பேருந்து, வேன், கார், லாரி, கார், இரு சக்கர வாகனம் என தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் திருமழிசை அடுத்துள்ள தண்டலம் பகுதியில் சவீதா தனியார் கல்லுாரி மருத்துவமனை எதிரே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பையை அகற்றாமல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி நெடுஞ்சாலையோரம் ஏரியில் குப்பை கொட்டுவது மற்றும் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

