/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 10, 2024 12:30 AM

கடம்பத்துார், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெங்கத்துார் ஊராட்சி.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் என தினமும் 20,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்பாட்டுக்கு வராததால் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பை தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏற்பட்ட புகையால், இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

