sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்

/

எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்

எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்

எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : மார் 01, 2025 12:37 AM

Google News

ADDED : மார் 01, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்,அரக்கோணம், எம்.ஆர்.எப்., தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிபுத்துாரில், எம்.ஆர்.எப்., டயர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவது போல் தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை வேலையை புறக்கணித்து, தொழிற்சாலை நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் போலீசார், தொழிற்சாலை நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us