sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

/

கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை


ADDED : பிப் 25, 2025 07:51 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:'வீடுகளில் கொசு புழுக்களை உற்பத்தி ஆகாமல் நகரவாசிகள் கண்காணிக்க வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில் 16,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சி முழுதும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடு தோறும் சுகாதார ஊழியர்கள் சென்று, 'அபேட்' கொசு மருந்து தெளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இதை நகரவாசிகள் உணர்ந்து, தங்களது வீடுகளில் கொசு உற்பத்தி ஆகாமல் கண்காணிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரின் குடியிருப்பினை, தொற்று நோய் பரப்பும் இடமாக கருதப்பட்டு, பொது சுகாதார சட்ட விதிகளின்படி அபராதமும். சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எனவே, டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான நகராட்சி நடவடிக்கைக்கு நகரவாசிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us