sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை

/

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவருக்கு வலை


ADDED : ஜூன் 03, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த மாதம் 28ம் தேதி வேலை முடித்து விட்டு, அரக்கோணத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி திருத்தணிக்கு பயணம் செய்தார்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது, அதே பேருந்தில் பயணம் செய்த திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திக், 24, அலெக்ஸ், 25, ஆகியோர் வழிவிடுமாறு கவியரசனிடம் தகராறு செய்தனர்.

பின், தன் இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றவரை கார்த்திக், அலெக்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கினர். பலத்த காயமடைந்த கவியரசன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், அலெக்ஸை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us