/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னமண்டலி பகுதியில் மாட்டுத்தொழுவமான நுாலகம்
/
சின்னமண்டலி பகுதியில் மாட்டுத்தொழுவமான நுாலகம்
ADDED : ஏப் 06, 2024 12:52 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் அரசு பள்ளி அருகே, கிளை நுாலகம் அமைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வாசகர் உள்ளனர். இந்த நுாலகம் பழுதடைந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 2022 - - 23ம் ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கட்டடம் சீரமைக்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே பாழாகும் நிலை உள்ளது. மேலும் இந்த நுாலக வளாகத்தை அப்பகுதிவாசிகள் மாட்டுத்தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நுாலக கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

