sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி

/

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பீதி


ADDED : மே 02, 2024 01:49 AM

Google News

ADDED : மே 02, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ளது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியாக செல்கின்றன.

இதனால், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கால்நடைகளை வீட்டில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இவைகள் கூட்டமாக இரை தேடி கடைகளுக்கு செல்லும்போது வியாபாரிகள் அதை விரட்டும் போது, அவை தறிகெட்டு ஓடும் போது பாதசாரிகள், வாகன ஒட்டிகள் மீது மோதி விடுகிறது.

இதனால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us