/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைமேடை மாறி வந்த ஏலகிரி விரைவு ரயில் கடைசி நிமிட அறிவிப்பால் பயணியர் அவதி
/
நடைமேடை மாறி வந்த ஏலகிரி விரைவு ரயில் கடைசி நிமிட அறிவிப்பால் பயணியர் அவதி
நடைமேடை மாறி வந்த ஏலகிரி விரைவு ரயில் கடைசி நிமிட அறிவிப்பால் பயணியர் அவதி
நடைமேடை மாறி வந்த ஏலகிரி விரைவு ரயில் கடைசி நிமிட அறிவிப்பால் பயணியர் அவதி
UPDATED : ஆக 21, 2024 10:28 PM
ADDED : ஆக 21, 2024 09:45 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், வழக்கமாக நிறுத்தப்படும் நடைமேடை மாறி, வேறொரு நடைமேடையில் ஏலகிரி விரைவு ரயில் வருவதாக, கடைசி நிமிட அறிவிப்பால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை நேரத்தில், சென்னைக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு என, ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். பெரும்பாலானோர், காலை 8:00 மணியளவில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலில் பயணிக்கின்றனர்.
அதிக பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கம் போல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், நடைமேடை ஒன்றில் நின்று செல்வது வழக்கம். இதே போல், நேற்று காலை, 300க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் பயணம் செய்ய, நடைமேடை ஒன்றில் காத்திருந்தனர்.
ஆனால், ரயில் வருவதற்கு முன் கடைசி நேரத்தில், ஏலகிரி விரைவு ரயில் நடைமேடை 3ல் நின்று செல்லும் என, அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால், நடைமேடை ஒன்றில் காத்திருந்த பயணியர், ரயிலை பிடிக்கும் அவசரத்தில், ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து, சென்றனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், 2வது நடைமேடை ஒட்டிய தண்டவாளத்தில் அதிவேகத்தில் வந்ததால், அதனை கண்ட பயணியர் அலறி அடித்து, ஒதுங்கி நின்றனர். எவ்வித அசம்பாவிதமும் நேரிடவில்லை.
இதுகுறித்து ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:
ரயில் வருவதற்கு கடைசி நிமிடத்தில் தான், அறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே, ரயில் வருவதற்கு, 15 நிமிடத்திற்கு முன் அறிவிக்க வேண்டும்.
இதுகுறித்து, சென்னை கோட்ட மேலாளருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் வருகை, புறப்பாடு குறித்து தகவல் தெரிவிக்கும் பணியில் உள்ள
பலருக்கும் தமிழ் தெரியாததால், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான்
அறிவிக்கின்றனர். இதனால், படிக்க தெரியாத பாமர மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, தமிழிலும் அறிவிக்க வேண்டும்.