ADDED : செப் 01, 2024 11:05 PM
திருத்தணி: திருத்தணி முருகப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 55. இவர், திருத்தணி என்.எஸ்.சி. போஸ் சாலை, 2வது ரயில்வே கேட் அருகே, அடகு கடை மற்றும் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சண்முகம் மனைவி வள்ளி, 49, என்பவர் வியாபாரம் முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, 43 கிராம் தங்க நகை, 6 கிலோ வெள்ளி மற்றும் 50,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கடையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர், சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த பங்க் முருகன், 61, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடு போன பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.