sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உயர்கோபுர மின்விளக்குகள் பழுது இரவு நேரங்களில் மக்கள் தவிப்பு

/

உயர்கோபுர மின்விளக்குகள் பழுது இரவு நேரங்களில் மக்கள் தவிப்பு

உயர்கோபுர மின்விளக்குகள் பழுது இரவு நேரங்களில் மக்கள் தவிப்பு

உயர்கோபுர மின்விளக்குகள் பழுது இரவு நேரங்களில் மக்கள் தவிப்பு


ADDED : மார் 10, 2025 11:53 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2014 - 2024 காலகட்டத்தில், திருவள்ளூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 50க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், பிரபலமான கோவில்களின் முகப்புகள் உள்ளிட்ட இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

இவை ஒவ்வொன்றும், 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேண்பாக்கம், திருவேங்கிடபுரம், இலவம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுதால்,அப்பகுதிகள் இருண்டு கிடக்கின்றன.

மாநில நெடுஞ்சாலையில் இருப்பதால், இவற்றை யார் பராமரிப்பது என்ற பிரச்னையில் கவனிப்பாரின்றி கிடக்கின்றன. இதே நிலை தான் ஏராளமான கிராமங்களிலும் உள்ளது.

செயலிழந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us