sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மனு

/

நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மனு

நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மனு

நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மனு


ADDED : ஆக 28, 2024 08:08 PM

Google News

ADDED : ஆக 28, 2024 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:அய்யர்கண்டிகை கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, கிராம மக்கள் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கவரைப்பேட்டை அடுத்த கெட்ணமல்லி ஊராட்சிக்கு உட்பட்டது அய்யர்கண்டிகை கிராமம். அங்கு, 478, 479/1, 510 ஆகிய சர்வே எண்களில், 11 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

அதை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளால், மழைக்காலங்களில் வரத்து கால்வாய் வழியாக நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், அந்த இடத்தில் 100 நாள் வேலை மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்க வழிவகுக்கும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி மற்றும் பி.டி.ஓ., சந்திரசேகர் ஆகியோர், 'உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us