/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 31க்குள் பதிவு செய்ய அழைப்பு
/
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 31க்குள் பதிவு செய்ய அழைப்பு
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 31க்குள் பதிவு செய்ய அழைப்பு
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 31க்குள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஜூலை 28, 2024 01:59 AM
திருவள்ளூர்:பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், வரும் 31க்குள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2016 -- 17, 2022 - -23 வரை விவசாயிகளுக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாக நடவடிக்கை வாயிலாக, 363.08 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை, 1,63,346 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் தவறான வங்கி கணக்குகள் பதிவேற்றம் செய்ததால் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள 7,588 விவசாயிகளுக்கு 14.39 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
2024-- 25 காரிப் பருவத்தில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 690, கம்பு-218, பச்சைபயறு, உளுந்து -397, நிலக்கடலை-616 ரூபாய் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தலாம்.
இந்த திட்டத்தில் விவசாயிகள் வரும் 31க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதுவரை காரிப் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு 700 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.