/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கர்ப்பமான தி.நகர் செவிலியர் கழிப்பறையில் தனக்குதானே பிரசவம் 7 மாத சிசுவை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்
/
கர்ப்பமான தி.நகர் செவிலியர் கழிப்பறையில் தனக்குதானே பிரசவம் 7 மாத சிசுவை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்
கர்ப்பமான தி.நகர் செவிலியர் கழிப்பறையில் தனக்குதானே பிரசவம் 7 மாத சிசுவை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்
கர்ப்பமான தி.நகர் செவிலியர் கழிப்பறையில் தனக்குதானே பிரசவம் 7 மாத சிசுவை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்
ADDED : மே 01, 2024 09:55 PM
மாம்பலம்:காதலன் வாயிலாக கர்ப்பமான செவிலியர், கழிப்பறையில் சிசுவின் கழுத்தை அறுத்து பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், 24 வயது பெண். செவிலியர் படிப்பை முடித்த இவர், ஓராண்டாக, சென்னை, தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.
தி.நகர், தெற்கு போக் சாலையில் உள்ள மருத்துவமனை பணியாளர்கள் விடுதியில் தங்கி, மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த 29 வயது வாலிபரை, செவிலியர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதில், செவிலியர் கர்ப்பமாகி யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.
இந்நிலையில், 31 வாரம் கர்ப்பமான செவிலியருக்கு, நேற்று முன்தினம் காலை, வயிற்று வலி ஏற்பட்டது.
அது பிரசவ வலி என்பதை உணர்ந்த அவர், தங்கியிருக்கும் விடுதியில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அவர் வலியில் துடிக்க, வயிற்றில் இருந்து சிசு வெளியே வர தாமதமானது. இதனால், செய்வது அறியாமல் தவித்த அவர், சிசுவை வெளியே இழுக்க முயற்சி செய்தார். கழுத்து, உடல் வந்த நிலையில், கால்கள் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து அவர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் முதலில் கழுத்தில் வெட்டினார். பின், முட்டிக்கு கீழே இரு கால்களையும் துண்டாக்கினார்.
இதையடுத்து, ஒரு காலை மட்டும் கழிப்பறையில் போட்டு தண்ணீர் ஊற்றினார். சிசுவின் ஒரு கால் மற்றும் உடலை துணியில் சுற்றி, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டதும், அவர் திடீரென மயக்கமடைந்தார்.
சில மணி நேரத்திற்கு பின், கழிப்பறைக்கு சென்றவர்கள் இதை பார்த்ததும், மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.
அதன் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, செவிலியர் மற்றும் இறந்த குழந்தையின் உடல் பாகங்களை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்போது, செவிலியர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தகவலின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அத்துடன், இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

